Friday, May 8, 2009

கொழும்பில் 75 தமிழர்கள் கைது

சிறீலங்கா படையினர் கொழும்பு கொட்டகேனா, கிறான்பாஸ், முகத்துவாரம், வெள்ளவத்தை, பம்பலப்பிட்டிய, மற்றும் கொல்பிட்டி ஆகிய பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் அதிகாலைமுதல் இரவு வரை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 75 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.



இவர்கள் அனைவரும் யாழ்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் வெசாக் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்குடன் இவ்வர்களை கைது செய்ததாக இக்கைதுக்கான காரணத்தினை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



சுமார் நூறு தமிழர்கள் சிறீலங்கா கொழும்பு மற்றும் தெமட்டகொட காவல்துறைநிலையங்களில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரியவருகிறது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.