Wednesday, May 20, 2009

யாழ்.குடாநாட்டில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்கள் 48 மணி நேரத்தில் இராணுவத்திடம் சரணடைய வேண்டும்: பலாலி படைத்தலைமையகம் அறிவிப்பு

யாழ். குடாநாட்டில் உள்ள விடுதலைப் புலி உறுப்பினர்கள் சகல வன்முறைகளையும் கைவிட்டு 48 மணித்தியாலத்திற்குள் இராணுவத்திடம் சரண் அடையுமாறு கேட்கப்பட்டுள்ளது.

அதேவேளை விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட வசதிகளைக் கொடுத்து உதவுவது தவறு என்றும் அவர்களை இராணுவத்திடம் சரண் அடையச் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறும் பாதுகாப்புப் படைகளின் யாழ் தளபதி பொது மக்களைக் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக பலாலி பாதுகாப்புப் படைகளின் யாழ் தளபதி விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

யாழ் மக்களின் சமாதான வாழ்க்கை நிலையை சீர்குலைக்கத் தயாராக இருக்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு மற்றும் தங்குமிட வசதிகள் உள்ளிட்ட வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்காக உதவி புரிவது தவறு என்று பொதுமக்களுக்கு அறியத் தருவதோடு, அவர்கள் உங்களின் உறவாக அல்லது நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வதற்காக இராணுவத்திடம் சரண் அடைவதற்கு தேவையான செயற்பாடுகளைச் செய்யுங்கள்.

சரண் அடைபவர்கள் எவ்வித பயம், சந்தேகமின்றி உங்களால் அவர்களைச் சரணடையச் செய்ய முடியாவிட்டால் புலனனாய்வு தகவலின் படி அவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்த நீங்களும் குற்றவாளியாக நீதிமார்க்கப்படி கணிக்கப்படுவீர்கள்.

பயங்கரவாதச் செயலுக்கு தொடர்புடையவர்களின் புனர்வாழ்வு நிமிர்த்தம் அரசாங்கம் செய்திருக்கும் இந்த நற்செயற் திட்டத்திற்கு உங்களதும், மற்றவர்களினதும் ஒத்துழைப்பும் துணையும் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என அறியத் தருகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

***!!!!!!!!!!அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!!!!!!***

எமது அன்பான வீரத்தமிழர்களுக்கு!!!!!!!எமது இணயத்தளம் மிக விரைவில் ஆரம்பிக்க இருக்கின்றது என்பதை அறியத் தருகின்றோம்.பல இன்னல்களையும் தாண்டி இறுதி இலக்கை நோக்கி ஆரம்பிக்கப்படவுள்ளது.இந்த வலைப்பதிவு ஊடாக உங்கள் அனைவரையும் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.இப்படிக்கு தாய்மடி இயக்குணர்கள். இலட்சியத்தால் ஒன்று பட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது!! -மேதகு வே. பிரபாகரன்.